ஐஐடி மாணவர் தற்கொலைகள்: யார் பொறுப்பேற்பது?

By செய்திப்பிரிவு

இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) சென்னை வளாகத்தில், முதுகலை அறிவியல் பட்டம் படித்துவந்த மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 22 வயது மாணவர், விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டிருப்பதும் இன்னொரு மாணவர் தற்கொலைக்கு முயன்றிருப்பதும் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.

ஐஐடி உள்ளிட்ட இந்தியாவின் புகழ்மிக்க உயர்கல்வி நிறுவனங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்களில் 2014இலிருந்து 2021வரை 122 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. 2019இல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகப் பெறப்பட்ட தகவல்களின் மூலம் அதற்கு முந்தைய பத்தாண்டுகளில் இந்தியாவின் எட்டு ஐஐடிக்களில் 52 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. இதில் அதிகபட்சமாக சென்னை ஐஐடியில் 14 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது கவனிக்கத்தக்கது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE