குழந்தைப் பராமரிப்பு: அரசும் நிறுவனங்களும் பொறுப்பேற்க வேண்டும்!

By செய்திப்பிரிவு

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா, தனியார் திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் தன் மூன்று வயது மகனைக் கைகளில் ஏந்தியபடி உரையாற்றியது ‘குழந்தைப் பராமரிப்பு’ தொடர்பான விவாதத்தைத் தொடங்கிவைத்துள்ளது. ஆட்சியர் போன்ற அரசு உயர்பதவியில் இருப்பவர் அலுவல்ரீதியான நிகழ்ச்சிக்கு மகனை அழைத்துவந்தது தவறு என்றும், ஆட்சியராக இருந்தபோதும் ஒரு தாயாகக் கடமையாற்றியதில் தவறில்லை என்றும் சமூக வலைதளங்களில் இருவேறு கருத்துகள் பதிவிடப்பட்டன.

இந்தியக் குடும்பங்களில் குழந்தை வளர்ப்பு என்பது முழுக்கவும் பெண்ணைச் சார்ந்தது என்றே கற்பிக்கப்பட்டுள்ளது. பாலூட்டுவது தவிர்த்த மற்ற எல்லாப் பணிகளையும் கணவரும் வீட்டாரும் பகிர்ந்துகொள்ளலாம் என்கிற நிலையில், அனைத்துமே பெண்கள்மீது சுமத்தப்படுவது பாரபட்சமானது. குழந்தைப் பராமரிப்பில் கணவரின் உதவியைக் கோரும் பெண்கள், ‘தாய்மை’ என்கிற புனிதத்தை மீறிவிட்டதாகக் குற்றம்சாட்டப்படுவதும் இங்கே நிகழ்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் பெண்கள் தங்கள் பணியிடங்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE