முடிவுக்கு வருகிறதா கோவிட்-19?

By செய்திப்பிரிவு

உலகளாவிய கோவிட் பெருந்தொற்று முடிவுக்கு வரும் காலம் கண்ணுக்குத் தெரிவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதனாம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் இதற்கு வேறுவிதமாக விளக்கம் அளித்துள்ளார். அதாவது, கரோனா வைரஸ் தொற்றைப் பருவகாலத் தொற்றுபோல் அணுகும் நிலைக்கு நாம் இன்னும் தயாராகவில்லை என்றும் உலகம் முழுவதும் பருவகால வரையறையின்றி இந்த நோய் பலருக்கும் பரவிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இரண்டு தவணைத் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்ட பிறகு, கோவிட் குறித்துப் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை என்கிறார் மூத்த வைராலஜி நிபுணர் ககன்தீப் காங். புதிய வேற்றுருவால் மக்களுக்கு ஆங்காங்கே தொற்று ஏற்படும்போதும் அது தீவிரமடையவில்லை என்பது முக்கியமானது. தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் மக்களிடையே நோய்த் தடுப்பாற்றல் அதிகரித்திருப்பதும் இதற்குக் காரணம் என்கிறார் ககன்தீப் காங். பெரும்பாலான நாடுகளில் இரண்டு தவணைகள் தடுப்பூசி போடப்பட்டுவிட்டதால் பூஸ்டர் ஊசியோ நான்காம் தவணை ஊசியோ தேவையில்லை என்பது அவரது வாதம். முதியவர்களும் தேவை உள்ளோரும் மட்டும் ஆண்டுக்கு ஒருமுறை இந்த முன்னெச்சரிக்கை ஊசியைச் செலுத்திக்கொள்ளலாம் என்கிறார் அவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE