மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேவேளையில், தனக்குக் கிடைத்திருக்கும் பிணையைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட அர்விந்த் கேஜ்ரிவால் முன்னெடுக்கும் முயற்சிகளும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் பல்வேறு வகையில் குடைச்சல் கொடுத்துவந்த பாஜகவின் செயல்பாடுகளும் மக்கள் மன்றத்தில் ஏமாற்றத்துடன் பார்க்கப்படுவதை மறுக்க முடியாது.
இந்த வழக்கில் ஏற்கெனவே ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர் 13 இல் அர்விந்த் கேஜ்ரிவாலுக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ஏற்கெனவே அமலாக்கத் துறை வழக்கில் ஜூலை 12இல் கேஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை வழங்கப்பட்டிருந்தாலும் சிபிஐ-யின் கைது நடவடிக்கை அவரை மேலும் பல நாள்களுக்கு திஹார் சிறையில் அடைத்துவைக்க வழிவகுத்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்