கர்நாடக முதல்வர் மீது ஊழல் புகார்: உண்மை வெளிவர வேண்டும்!

By செய்திப்பிரிவு

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பி.எம்.பார்வதிக்கு மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (முடா) மனைகள் வழங்கியதாகப் புகார்கள் எழுந்த நிலையில், இவ்விவகாரத்தில் முதல்வர் மீது வழக்குத் தொடுக்க ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மைசூருவின் விஜயநகர் பகுதியில் 38,284 சதுர அடி (0.88 ஏக்கர்) கொண்ட 14 மனைகளை 2021இல் ‘முடா’ ஒதுக்கியது. பார்வதியிடமிருந்து கையகப்படுத்திய 1,48,104 சதுர அடி (3.16 ஏக்கர்) நிலத்துக்கு ஈடாகவே மாற்று நிலம் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், முடா கையகப்படுத்திய நிலத்தைவிட வழங்கிய நிலத்தின் மதிப்பு அதிகம் என்பதுதான் குற்றச்சாட்டு. இதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் குற்றஞ்சாட்டிவரும் எதிர்க்கட்சிகள், சித்தராமையா பதவி விலகவும் வலியுறுத்திவருகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE