மருத்துவம் பயிலும் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர்களில் கணிசமானோர் தீவிர மனநலச் சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் வெளியாகியிருக்கும் தகவல்கள் வேதனையளிக்கின்றன. தேசிய அளவிலான ஓர் ஆய்வில் தெரியவந்துள்ள இந்தத் தகவல்கள், மருத்துவத் துறையின் அடித்தளமாக விளங்கும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளைப் பட்டவர்த்தனம் ஆக்கியிருக்கின்றன.
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மனநலம், படிப்பிலும் பணியிலும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அவர்களில் சிலர் எடுக்கும் வருந்தத்தக்க முடிவுகள் போன்றவற்றைக் குறித்து ஆராய, ‘மருத்துவ மாணவர்களின் மனநலம் - நல்வாழ்வுக்கான தேசியப் பணிக்குழு’வைத் தேசிய மருத்துவ ஆணையம் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்