ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த 33ஆவது ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாகப் பங்களித்து நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். விளையாட்டுத் துறையில் இந்தியாவுக்குக் கிடைத்துவரும் முன்னேற்றத்துக்கு இது சான்றாகியிருக்கிறது.
ஒலிம்பிக்கில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்திவரும் அமெரிக்காவும் சீனாவும் இந்த முறையும் அதிகப் பதக்கங்களை வென்று முதல் இரண்டு இடங்களைப் பெற்றன. இந்தியா தடகளத்தில் வெள்ளி, ஹாக்கியில் வெண்கலம், துப்பாக்கிச் சுடுதலில் மூன்று வெண்கலம், மல்யுத்தத்தில் வெண்கலம் என ஆறு பதக்கங்களை வென்றது. டோக்கியோ ஒலிம்பிக்கைவிட ஒரு பதக்கம் குறைவு என்றாலும், இந்தியர்களின் விளையாட்டுத் திறமை துலக்கமாக வெளிப்பட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்