திரைத் துறைப் பெண்களைப் பாதுகாப்பதும் அரசின் கடமையே!

By செய்திப்பிரிவு

மலையாளத் திரைப்படத் துறையில் பெண்களின் நிலை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நீதிபதி ஹேமா ஆணைய அறிக்கையை வெளியிட கேரள உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. கேரளத்தில் 2017ஆம் ஆண்டு ஒரு நடிகை கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் இந்திய அளவில் அதிர்ச்சியை உண்டாக்கியது. அந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்று நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்தில், மலையாள நடிகர் அமைப்பான ‘அம்மா’ பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாகச் செயல்படாமல் குற்றம்சாட்டப்பட்ட திலீப்பைப் பாதுகாப்பதாக நடிகை பார்வதி, மஞ்சு வாரியர், படத்தொகுப்பாளர் பீனா, இயக்குநர் அஞ்சலி மேனன் உள்ளிட்ட பலர் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்தனர். மேலும், நடிகைகள் பலர் திரைத் துறையில் தங்களுக்கு எதிராக நிகழ்ந்த பாலியல், தொழில் சுரண்டல்களை வெளிப்படுத்தினர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE