சட்டத்துக்கு அப்பாற்பட்ட தண்டனைகள் ஒழிக்கப்பட வேண்டும்!

By செய்திப்பிரிவு

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல் துறையிடம் சரணடைந்தவர்களில் ஒருவர், விசாரணைக்காக வெளியில் அழைத்துச் செல்லப்பட்டபோது மோதல் கொலையில் (என்கவுன்ட்டர்) சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது; ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான சந்தேகங்களையும் வலுவடைய வைத்துள்ளது.

கடந்த ஜூலை 5 அன்று சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங்கை கூலிப் படையினர் கொலைசெய்தனர். இதையடுத்துக் காவல் துறையிடம் 8 பேர் சரணடைந்தனர். மேலும், மூன்று பேரைக் காவல் துறை கைதுசெய்தது. இந்நிலையில், இவ்வழக்கில் சரணடைந்தவர்களில் ஒருவரான திருவேங்கடம் ஜூலை 14 அன்று தப்பிக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் காவல் துறை அறிவித்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE