ஜம்மு - காஷ்மீரில் பேருந்தில் சென்ற புனித யாத்திரைப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுக்கொண்ட தருணத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், கடும் கண்டனங்களையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.
உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் அண்மையில் ஆன்மிகப் பயணமாக காஷ்மீர் சென்றிருந்தனர். ஜூன் 9ஆம் தேதி, ஜம்மு பிராந்தியத்தின் ரியாஸி மாவட்டத்தில் உள்ள சிவ கோரி கோயிலுக்குச் சென்றுவிட்டு, கத்ராவில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் சென்றபோது, திர்யாத் கிராமத்தின் அருகே மாலை 6.30 மணி அளவில் அவர்கள் பயணம் செய்த பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் நிலைகுலைந்த பேருந்து, அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று வயதுக் குழந்தை உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் குறித்துத் தேசியப் புலனாய்வு முகமை தீவிர விசாரணை நடத்திவருகிறது. மத்திய உள் துறை அமைச்சகமும் இந்த விசாரணையை உன்னிப்பாகக் கவனித்துவருகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்