அழிந்துவரும் பறவையினமான கானமயிலின் பாதுகாப்பு குறித்த வழக்கு ஒன்றில், காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளிலிருந்து விடுபடுவது அடிப்படை உரிமை - மனித உரிமை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்திய அரசமைப்புச் சட்டக் கூறுகள் 14 (சட்டத்தின் முன் எல்லாரும் சமம், சம பாதுகாப்பு), 21 (வாழ்வதற்கான உரிமை) ஆகியவற்றால் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது என அந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை சில காலநிலை வழக்குகள் மட்டுமே நீதிமன்றங்களுக்கு வந்துள்ளன. காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளுக்கு எதிரான மனித உரிமையை முன்னிறுத்தும் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, எதிர்காலப் பாதிப்புகளுக்கு எதிரான முன்கூட்டிய நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்