வழக்குகளில் சிக்குபவர்கள் தாங்கள் கைதுசெய்யப்படுவதைத் தவிர்த்துக்கொள்ள முன்கூட்டியே பிணை பெறுவது (முன்ஜாமீன்) குறித்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு, நீதித் துறை குறித்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது. ‘பெரும்பாலான வழக்குகளில் பிணை வழங்குவது இயல்பானதுதான்; அதேநேரம், முன்ஜாமீன் வழங்குவது அப்படியானது அல்ல’ என்று சுட்டிக்காட்டியிருக்கும் நீதிமன்றம், ‘பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் சிக்கியிருப்பவர்களுக்கு முன்ஜாமீன் வழங்குவது நீதி வழுவுதலுக்குச் சமம்’ என்றும் கண்டிப்பான தொனியில் கூறியிருக்கிறது.
2020 பிப்ரவரியில், பிஹாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தின் ஜுஹுலி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைச் சூனியக்காரர் எனப் பழிசுமத்தி, கடுமையாகத் தாக்கியதாகவும் ஆடையைக் கிழித்து, மனிதக் கழிவுகளை உட்கொள்ளச் செய்து அவமானப்படுத்தியதாகவும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்