பணியிடப் பாலினப் பாகுபாட்டைக் களையும் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

திருமணம் செய்துகொண்டதற்காகப் பெண் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்பதை உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ராணுவச் செவிலிச் சேவைகள் பிரிவில் லெஃப்டினென்ட் அந்தஸ்து கொண்ட அதிகாரியாக செகந்திராபாத் ராணுவ மருத்துவமனையில் நிரந்தரப் பணியாற்றிவந்த செலினா ஜான், திருமணம் செய்துகொண்டதால் 1988இல் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

‘ராணுவச் சேவைகளில் பணியாற்றும் பெண்கள் திருமணம் செய்துகொண்டால், அவர்களைப் பணியிலிருந்து நீக்கலாம்’ என்று 1977இல் சேர்க்கப்பட்ட விதி, 1995இல் நீக்கப்பட்டது. பணிநீக்கத்தை எதிர்த்து செலினா தொடர்ந்திருந்த வழக்கில், ஆயுதம் ஏந்திய படைகள் தீர்ப்பாயத்தின் லக்னோ அமர்வு, அவர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட வேண்டும் என்று 2016இல் உத்தரவிட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE