வேங்கைவயல் விவகாரம்: உண்மை வெளிவர வேண்டும்!

By செய்திப்பிரிவு

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் 31 பேரிடம் மாதிரி பெறப்பட்டு நடத்தப்பட்ட மரபணுப் பரிசோதனை தோல்வி அடைந்திருக்கிறது. இதுதொடர்பான உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி கேட்டு சிபிசிஐடி தாக்கல் செய்த மனு பிப்ரவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரம் குறித்த உண்மை இனியாவது வெளிவருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

2022 டிசம்பர் மாதம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், பட்டியல் சாதி மக்கள் பயன்படுத்தும் மேல்நிலைக் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை முதலில் காவல் துறை விசாரித்துவந்தது. பிறகு 2023இல் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையிலான ஆணையம் இதுதொடர்பாக விசாரணை நடத்தியுள்ளது. ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் இதுகுறித்த உண்மை வெளியாவது தாமதமாகிக்கொண்டே செல்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE