ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்: தனித்தன்மையுடன் வென்ற தமிழ்நாடு

By செய்திப்பிரிவு

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த செயல்திறன் கொண்ட பிரிவில் இடம்பிடித்திருக்கும் ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மை இடத்தைப் பிடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மத்திய வர்த்தகம்-தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘தொழில்-உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை’ வெளியிட்டிருக்கும் இந்தத் தரவரிசைப் பட்டியல், தமிழ்நாட்டில் புதிய நிறுவனங்களைத் தொடங்க விரும்புபவர்களுக்குப் பெரும் ஊக்கம் தரும் என்னும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

சந்தைக்குப் புதிதான தயாரிப்புகளைக் கொண்டுவருகின்ற அல்லது ஏற்கெனவே இருக்கும் தயாரிப்புகளை முற்றிலும் புதிய வடிவில் கொண்டுவருகின்ற நிறுவனங்களும், புதிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் என அழைக்கப்படுகின்றன; புத்தாக்கச் சிந்தனைதான் இவற்றின் தனித்தன்மை. இந்தியாவில், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கான வலுவான சூழலை உருவாக்கும் நோக்கில் 2018 பிப்ரவரியில், மாநிலங்களின் ஸ்டார்ட்-அப் தரவரிசை அமைப்பு தொடங்கப்பட்டது. மாநில / யூனியன் பிரதேச அரசுகள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அமல்படுத்தும் கொள்கைகள், முன்னெடுக்கும் வளர்ச்சிச் செயல்பாடுகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் ஜனவரி 16 அன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில், நான்காவது தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 2022, 2023 ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

37 mins ago

கல்வி

24 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்