சென்னையைப் புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயலின் விளைவாக, எண்ணெய்க் கசிவால் எண்ணூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் இரட்டைப் பேரிடரை எதிர்கொண்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. மிக்ஜாம் புயலின்போது பெய்த தொடர் மழையால், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனிலிருந்து (சிபிசிஎல்) கசிந்த எண்ணெய், எண்ணூர் முகத்துவாரத்தில் கலந்தது மிகப் பெரிய மாசுபாடு பிரச்சினையை உருவாக்கியிருக்கிறது. இதன் தாக்கம் எண்ணூர், எர்ணாவூர், பக்கிங்காம் கால்வாய் ஆகிய பகுதிகளுக்கு நீண்டது. எண்ணெய் கலந்த நீர் வெள்ளத்துடன் கலந்து, அருகே இருக்கும் வீடுகளுக்குள்ளும் புகுந்ததால், பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். பல வீடுகளில் எண்ணெய்ப் படலம் படிந்து, அதை அகற்ற முடியாமல் மக்கள் துன்பத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். வீட்டு உபயோகப் பொருள்களைக்கூடப் பயன்படுத்த முடியாத நிலையில் பலர் இருக்கிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்