மிக்ஜாம் பாதிப்புகள்: திட்டமிடலின் போதாமை

By செய்திப்பிரிவு

சென்னையையும் அதைச் சுற்றியுள்ள மூன்று மாவட்டங்களையும் புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயலின் பாதிப்பிலிருந்து சில பகுதிகள் மெல்ல மெல்ல மீண்டாலும், பல பகுதிகள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் இருப்பதும் அரசின் திட்டமிடலில் உள்ள போதாமையை உணர்த்துகிறது. 2015 சென்னைப் பெருமழையைவிட இந்த ஆண்டு 45% அதிகமாக மழைபொழிந்ததே வெள்ளப் பாதிப்புக்குக் காரணம் எனச் சொல்லப்பட்டாலும், முந்தைய ஆண்டுகளின் அனுபவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளாமல், போதுமான முன்னேற்பாடுகளைச் செய்யாமல் இருந்ததுதான் மக்களை மிக மோசமான பாதிப்புக்குள்ளாக்கியது. புயல் தங்கள் மாநிலத்தை நோக்கி வருவதை அறிந்ததுமே, ஆந்திர அரசு 9,000 நிவாரண முகாம்களை அமைத்து, அவற்றில் ஆயிரத்துக்கும் அதிகமானோரைத் தங்கவைத்தது குறிப்பிடத்தக்கது; தமிழ்நாடு அரசு போதிய அளவுக்கு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE