இலவச ரேஷன் திட்டம்: நீட்டிப்பது மட்டும் தீர்வல்ல

By செய்திப்பிரிவு

இலவச ரேஷன் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. கரோனா காலத்தில் வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு எனக் கடும் நெருக்கடியில் இருந்த மக்களுக்குப் பயனுள்ளதாக இருந்த இத்திட்டம் நீட்டிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. அதேவேளையில், சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கு நடுவே பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டது சரியா என்றும் கேள்விகள் எழுந்திருக்கின்றன. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டம், 2020இல் கரோனா பொதுமுடக்கக் காலத்தின்போது அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்படி தனிநபர்களுக்கு மாதம் 5 கிலோ உணவு தானியத்தை மத்திய அரசு இலவசமாக வழங்கியது. 2013இல் கொண்டுவரப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், இந்தியாவின் மக்கள்தொகையில் 67 சதவீதத்தினர் மானியத்துடன் கூடிய உணவு தானியங்களைப் பெறுவதற்கான சட்டபூர்வ உரிமையை வழங்குகிறது. இச்சட்டத்தின்படி தற்போது 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் சுமார் 81.35 கோடிப் பயனாளர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய உணவுக் கழகம் வாயிலாக மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு மாதம் 2.04 லட்சம் டன் அரிசியை இலவசமாக வழங்குகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE