பெண்ணுக்கு வேண்டும் திருமண உரிமை!

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் காதல் தம்பதி ஆணவக் கொலை செய்யப்பட்டவிவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் தம்பதிகளுக்குப் பெரும்பாலும் தடையாக இருப்பது சாதிதான். இதில் அதிகம் பாதிக்கப்படுவது பட்டியல் சாதியினர்தான். இந்த அவலத்துக்கு முடிவுகட்ட சமூக அளவில் பெரும் பிரயத்தனங்கள் நடந்துவரும் நிலையில், தூத்துக்குடி சம்பவத்திலோசாதிப் பிரச்சினைகளைத் தாண்டிய காரணிகள் இருப்பதாக வெளியாகும் செய்திகள், இதன் இன்னொரு கோர முகத்தை வெளிப்படுத்துகின்றன.

கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வீரப்பட்டியைச் சேர்ந்த ஒரு காதல் தம்பதி அவர்கள் வீட்டில் வைத்தே கொல்லப்பட்டனர். தூத்துக்குடியில் இப்போது கொல்லப்பட்ட மாரிசெல்வம் – கார்த்திகா தம்பதியைப் போல் வீரப்பட்டி காதல் தம்பதி மாணிக்கராஜா - ரேஷ்மா இருவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள்தாம். மாணிக்கராஜா பொருளாதாரரீதியில் பின்தங்கிய நிலையில் இருந்தவர். ரேஷ்மா கல்லூரியில் படித்துவந்தவர். மாரிசெல்வமும் கார்த்திகாவும் கோவில்பட்டியில் தஞ்சமடைந்ததுபோல, மாணிக்கராஜாவும் ரேஷ்மாவும் மதுரையில் தஞ்சமடைந்தனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE