அரசியல் முரண் அல்ல, மாநில வளர்ச்சியே முக்கியம்!

By செய்திப்பிரிவு

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி காலதாமதம் செய்துவருவதாகக் கூறி, திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. இதேபோல பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களில் தேவையின்றி ஆளுநர் தலையிடுவதாகக் கூறி இன்னொரு ரிட் மனுவையும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாடு அரசைப் போலவே பஞ்சாப்பை ஆளும் ஆம் ஆத்மி அரசும், கேரளத்தை ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசும் அம்மாநிலங்களின் ஆளுநர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள், அரசின் உத்தரவுகள், கொள்கை முடிவுகள் போன்றவற்றுக்கு ஒப்புதல் வழங்காமல், நீண்ட காலம் கிடப்பில் போட்டுவைத்திருப்பதன் மூலம், அரசமைப்புச் சட்டப்படி ஆற்ற வேண்டிய கடமையை ஆளுநர் ஆற்ற மறுக்கிறார் என்று தனது மனுவில் தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE