ஹமாஸ் தொடங்கியது... இஸ்ரேல் தொடர்கிறது!

By செய்திப்பிரிவு

பத்து நாள்களைக் கடந்துவிட்ட நிலையிலும், பதற்றம் குறையாமல் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது காசா பிரச்சினை. யூதர்கள் ஒவ்வொரு வாரமும் ஓய்வுதினமாகக் கடைப்பிடிக்கும் சப்பாத்து தினமான சனிக்கிழமையன்று (அக்டோபர் 7) இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக காசாவை உருக்குலைத்துக்கொண்டிருக்கிறது இஸ்ரேல்.

ஹமாஸ் தாக்குதலில் 1,400க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேலின் பதிலடித் தாக்குதலில் 2,800க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர் கள் பலியாகியிருக்கிறார்கள். காயம் அடைந்தவர்களுக்கு இடமில்லாமல் மருத்துவ மனைகள் நிரம்பிவழிகின்றன. கொல்லப்பட்டவர்களின் சடலங்களை வைக்க இடமில்லாமல் சவக்கிடங்குகள் நிரம்பிவழிகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE