மாணவர்களின் ஒழுக்கம்: அனைவருக்கும் பொறுப்பு உண்டு!

By செய்திப்பிரிவு

மாணவர்களைக் கையாள்வதில் கல்வித் துறைக்கும் பொதுச் சமூகத்துக்கும் இருக்கும் போதாமைகளை வெளிப்படுத்தும் வகையில் அவ்வப்போது அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன. அப்படியான தருணங்களில் மட்டும் அவற்றைப் பற்றிய கவனம் குவிவது, பின்னர் அந்த அக்கறை நீர்த்துப்போவது எனத் தொடரும் சூழலால் விபரீதங்கள் இன்றுவரை தொடர்கின்றன. புதுக்கோட்டை அரசு மாதிரிப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சமீபத்திய உதாரணம்.

தலைமுடியை வெட்டிக்கொண்டு வருமாறு அந்த மாணவரிடம் ஆசிரியர் கடுமை காட்டியதாகவும், அதனால் ஏற்பட்ட விரக்தியில் மாணவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஆசிரியரின் கண்டிப்பால் தேர்வறையிலிருந்து பாதியில் வெளியேறியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரச்சினையை ஆசிரியர்கள் கையாண்ட விதம் கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE