தமிழ்நாட்டில் உள்ள 31,008 அரசுப் பள்ளிகளில், 1 முதல் 5ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. தமிழ்நாட்டில் 1920இல் நீதிக் கட்சியின் சர் பிட்டி தியாகராயரால் அரசுப் பள்ளிகளில் பொது உணவுத் திட்டம் இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், நிதிப் பற்றாக்குறை காரணமாகக் கைவிடப்பட்டது. 1957இல் அன்றைய முதலமைச்சர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் மீண்டும் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அது சத்துணவுத் திட்டமாக உருவெடுத்தது. மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் முட்டை, காய்கறிகள், வாழைப்பழத்துடன் கூடிய உணவு, கலந்த சாதம் என இத்திட்டம் பல மேம்பாடுகளைக் கண்டது. இதைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்குக் காலை உணவும் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை இருந்துவந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்