கச்சத்தீவை மீட்கும் பணியில் கரங்கள் ஒன்றிணையட்டும்!

By செய்திப்பிரிவு

கச்சத்தீவு பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பாரத மாதாவின் அங்கமாகிய கச்சத்தீவு இலங்கைக்குக் கையளிக்கப்பட்டது” எனும் விமர்சனத்தை முன்வைத்தார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழகத் தலைவர்கள் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று மீண்டும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் எல்லைப் பிரச்சினை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்தே இருக்கிறது. 1920களில், ராமநாதபுரம் ராஜாவுக்குக் கச்சத்தீவில் உள்ள அதிகாரத்தைக் காரணம் காட்டி, பிரிட்டிஷ் இந்திய அதிகாரிகள் இந்தியாவுக்குக் கச்சத்தீவில் உள்ள உரிமையை நிறுவியிருக்கிறார்கள். அப்போது கச்சத்தீவுப் பகுதியை இந்திய, இலங்கை மீனவர்கள் இருவருமே பயன்படுத்திவந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், தொடர்ந்து இலங்கை தரப்பு கச்சத்தீவு உரிமையை வலியுறுத்திவந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE