காவிரி நதிநீர்ப் பங்கீடு அட்டவணைப்படி தமிழ்நாட்டுக்குப் போதிய தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்ததையடுத்து, காவிரிப் பிரச்சினை மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. குடிநீர்த் தேவைக்கும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கும் தொடர்ந்து தண்ணீர் தேவைப்படும் நிலையில், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியிருப்பது தவிர்க்க முடியாத நடவடிக்கையாகியிருக்கிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, சாதாரண நீர் ஆண்டில், ஜூன் முதல் மே மாதம் வரையிலான காலத்தில், 177.25 டிஎம்சி தண்ணீரைக் கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும். அதன்படி 2023 ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 11 வரை கர்நாடகம் 53.7703 டிஎம்சி தண்ணீரைத் தமிழ்நாட்டுக்கு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 15.7993 டிஎம்சிதான் வந்திருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்