இந்தியத் தலைநகர் டெல்லியில் கடைகளில் அமில விற்பனைக்குத் தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருப்பது, அமில வீச்சு பாதிப்புக்கு உள்ளானவர்களையும், அவர்களுக்கு ஆதரவான செயற்பாட்டாளர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அமில வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளானவரும் அதிலிருந்து மீண்டுவந்து, அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பிற பெண்களுக்கான உதவிகளைச் செய்துவரும் செயற்பாட்டாளருமான ஷாஹீன் மாலிக், டெல்லியில் அமில விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை ஜூலை 27 அன்று விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா, சந்தீப் நரூலா அமர்வு, சட்டப்படி அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்காகவும் அமிலம் பயன்படுத்தப்படுகிறது எனக் கூறி மாலிக்கின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்