தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் முதியோர் இல்லங்கள் தொடங்கப்பட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். அரவணைப்பற்ற, ஆதரவற்ற நிலையில் இருக்கும் முதியோருக்கு நம்பிக்கையளிக்கும் தருணம் இது.
இந்தியச் சமூகத்தில் மரியாதைக்கு உரியவர்களாகக் கருதப்படும் முதியவர்கள், நடைமுறை வாழ்வில் குடும்ப அமைப்பிலும் பொது இடங்களிலும் புறக்கணிப்புகளுக்கும் அவமதிப்புகளுக்கும் குற்றச்செயல்களுக்கும் இலக்காவது தொடர்கிறது. 2021இல் மட்டும், இந்தியாவின் 19 பெருநகரங்களில் முதியோருக்கு எதிராக 4,264 குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது. இந்நிலையில், முதியோருக்குப் பாதுகாப்பான, சுகாதார வசதிகளுடன் கூடிய பராமரிப்பு இல்லங்கள் அவசியம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்