கும்பல் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!

By செய்திப்பிரிவு

கும்பல் கொலைகள் தொடர்பாக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தெஹ்சீன் பூனாவாலா எதிர் இந்திய அரசு (2018) வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவைக் கண்டிப்பாக அமல்படுத்துவது தொடர்பாகத் தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய இரு நபர் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

2015இல், உத்தரப் பிரதேசத்தின் தாத்ரி நகரில் தனது வீட்டில் மாட்டுக் கறி வைத்திருந்ததாக அடித்துக் கொல்லப்பட்ட அக்லாக் முதல் ஏராளமானோர் கும்பல் வன்முறைகளுக்குப் பலியாகியிருக்கிறார்கள். குழந்தைக் கடத்தல், பசுக் கடத்தல், மாட்டுக்கறி வைத்திருத்தல், திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்டது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தே இப்படியான வெறிச்செயல்களில் வன்முறையாளர்கள் ஈடுபடுகிறார்கள். குஜராத், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பசுவதைத் தடைச் சட்டம் அமலில் இருக்கிறது. இந்தச் சட்டத்தின் கூறுகளைத் தவறாகப் பயன்படுத்தும் பசு குண்டர்கள், தங்கள் குற்றங்களைப் பொதுவெளியில் நியாயப்படுத்துவதும் தொடர்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE