தமிழ்நாட்டில் அரசு, தனியார், சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன் என அனைத்து வகைப் பள்ளிகளுக்குமான ஆண்டுத் தேர்வுகள் நிறைவுபெற்று, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆண்டு விடுமுறை என்பது அந்தந்த மாநிலத்தின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்பக் கோடைமழை, பனிக்காலம் எனப் பகுத்தறிந்து திட்டமிடப்படுகிறது.
போதிய இடைவெளியில் வார இறுதி, பருவ முடிவு விடுமுறைகளும் இதை ஒட்டியே கணக்கிடப்பட்டு அளிக்கப்படுகின்றன. மாணவர்களின் நோக்கம், கல்வி என்ற குறிப்பிட்ட அடைவு சார்ந்து குவியும்போது, மனதில் ஏற்படும் சுமையைக் குறைப்பதற்காக அவர்களுக்கு ஓர் இடைவெளி தேவைப்படுகிறது. ஆனால், இன்றைய அவசர யுகத்தில் பள்ளி மாணவர்கள் பலருக்கு இந்த இடைவெளி மறுக்கப்படுவதுதான் வேதனையளிக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்