அஞ்சலி: விவான் சுந்தரம் | இந்தியக் கலையில் ஓர் எழுச்சி வடிவம்

By சி. மோகன்

கலை வெளிப்பாட்டில் மேதைமையும் சிந்தனையில் வளமும் ஆழ்ந்த கலை நம்பிக்கையும் கூடிய நம் காலத்தின் கலைஞன், விவான் சுந்தரம். தன் காலத்தின் நெருக்கடிகளுக்குக் கலை முகம் அளித்தவர். விளிம்பு நிலை மனிதர்களிடமும் அதிகாரம் ஏதுமற்ற சாமானிய மனிதர்கள்மீதும் அவர் கொண்டிருந்த அக்கறையும், அவருடைய மாறாக் கொள்கைப் பிடிப்புமே அவருடைய கலை வாழ்வை வழிநடத்தின. மார்ச் மாதத் தொடக்கத்தில் மூளை ரத்த நாளச் சேதம் காரணமாக புது டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவான், மார்ச் 29ஆம் தேதி தன்னுடைய 80ஆவது வயதில் காலமானார்.

கலை மகிழ்விப்பதற்கானது அல்ல; மாறாக, காலத்தின் சிடுக்குகளை விரித்துரைப்பதற்கும் விவாதிப்பதற்கும் விசாரிப்பதற்கும் உரிய சாதனம் என்று கருதியவர். அந்த நம்பிக்கையின் உறுதியோடும் கலை ஆற்றலோடும் கோட்டோவியம், வண்ண ஓவியம், சிற்பம், அச்சுருவாக்கம் (பிரிண்ட் மேக்கிங்), நிர்மாணக் கலை (இன்ஸ்டலேஷன்) எனக் கலை வெளியில் தொடர்ந்து நெடும் பயணம் மேற்கொண்டவர். இவருடைய படைப்புகள் உலகமெங்கும் முக்கியக் கண்காட்சிகளில் இடம்பெற்றிருக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE