ஆயுதப் போருக்கு அருகில் ஓர் அறப் போர்

By செய்திப்பிரிவு

இலங்கையின் நான்காம் கட்டப் போர் முடிவடைந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஈழத் தமிழ் மக்களின் வாழ்வை வெகுவாகப் பாதித்த அந்தப் போர் பற்றிய பதிவுகளை ஈழத் தமிழ் இலக்கியம் பலவாறு பதிவுசெய்து வருகிறது. அந்த வகையில் தீபச்செல்வனின் படைப்புகள் கவனிக்கத்தக்கவை. கவிதை, கட்டுரை, கதைகள் எனப் பல வடிவங்களில் தீபன் அந்தச் சூழலை எழுதிவருகிறார். அந்த வரிசையில் 2009 காலகட்டப் போரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வகித்த பங்கு என்ன என்பதைத் தனது ‘பயங்கரவாதி’ நாவல் வழி அவர் பதிவுசெய்துள்ளார்.

இந்த நாவல் மாறன் என்கிற கதாபாத்திரத்தை நாயகனாக முன்னிலைப்படுத்துகிறது. ஆனால் மலரினி, துருவன், சுதர்சன், பாரதியம்மாள் எனப் பலரின் கதைகளையும் சொல்கிறது. ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் உக்கிரமான போர் நடந்த பின்னணியில் யாழ்ப்பாணத்தை இந்நாவல் கதைக்களமாகக் கொண்டுள்ளது. புலிகளின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகள், திரிகோணமலை எனப் பகுதிகளும் வருகின்றன. ஆனால், யாழ்ப்பாணச் சூழலே நாவல் சொல்ல விரும்பிய மையம். கிளிநொச்சிப் பகுதியில் பிறந்து வளர்ந்து கல்லூரிப் படிப்புக்காக மாறன் யாழ்ப்பாணப் பகுதிக்குள் நுழைகிறான். இயல்பான வாழ்க்கைப்பாடுள்ள பகுதி என அரசு அறிவித்த அந்தப் பகுதியில் அவனுக்கு உருவாகும் பதற்றத்தைத் தொடக்கத்திலேயே நாவல் சித்தரித்துவிடுகிறது. சோதனையின்போது சிதறிய ‘ஈழ இலக்கிய வரலாறு’ புத்தகத்தைப் பார்த்த இலங்கை ராணுவ அதிகாரி, ‘எல்டிடிஈ ஈழம் புடிக்கிறது, நீ ஈழம் படிக்கிறது?’ எனக் கேட்கிறார். ஈழம் என்ற சொல் பயன்பாடே இலங்கை ஆதிக்கத்துக்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது என்பதை இக்காட்சி பதிவுசெய்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE