இப்போது தனக்கு 52 வயது என்கிறார் முருகன். அவரது வீட்டருகே இருக்கும் கல்லூரி கட்டப்பட்டே 50 ஆண்டுகள் இருக்கும். தான் சிறுவனாக இருந்தபோது அந்தக் கல்லூரியே உருவாகவில்லை என்றும் முருகன் சொல்கிறார். அவ்வாறெனில், அவருக்குக் குறைந்தபட்சம் 60 வயதாவது இருக்க வேண்டும். அவர் குடியிருக்கும் பகுதி அரை நூற்றாண்டுக்கு முன் ஒரு குக்கிராமம். இன்று அது மாநகராட்சி எல்லைக்குள் இருக்கிறது. வீட்டின் அருகிலேயே தொடக்கப் பள்ளி, கல்லூரி இருந்தாலும் கல்வி குறித்து அவரோ அவரது பெற்றோரோ நினைத்திருக்கவில்லை. இன்றைக்கு அவர் விவசாயக் கூலித் தொழிலாளி. காலையில் 7 மணிக்குப் போனால் மதியம் 2 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுகிறார். இது தவிர, நகர்ப் பகுதியில் உள்ள வீடுகளைச் சுற்றி புல் வெட்ட, புதிதாக வீடுகள் கட்டத் தொடங்கினால் அந்த இடங்களைச் சுத்தம் செய்ய என நாளொன்றுக்கு ரூ.1,500 வரைகூடச் சம்பாத்தியம் பெறுகிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்