துருக்கி துயரம்: பேரழிவு கற்றுத்தரும் பாடம்

By செய்திப்பிரிவு

துருக்கியிலும் அதன் அண்டை நாடான சிரியாவிலும் பிப்ரவரி 6 அன்று ஏற்பட்ட நிலநடுக்கம், இந்த ஆண்டின் மிகப் பெரிய துயரங்களில் ஒன்றாகப் பதிவாகியிருக்கிறது. இதுவரை 41,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் நிலையில், இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது. கடும் குளிர்காலம் என்பதால் மீட்புப் பணிகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

அடிக்கடி நிலநடுக்கப் பேரழிவைச் சந்திக்கும் நாடு துருக்கி. ‘அனடோலியன்’ எனப்படும் மேலடுக்குத் தட்டில் அமைந்திருக்கும் இந்நாட்டில், 1999இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 17,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2020இல் மட்டும் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE