திண்ணை: 6 ஆண்டுக்குப் பின் முரகாமியின் புதிய நாவல்

By செய்திப்பிரிவு

சர்வதேசப் புகழ்பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முரகாமியின் புதிய நாவல் இந்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முரகாமியின் பதிப்பாளர் சின்ஜோசா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். ஆனால், நாவலின் தலைப்பு உள்பட கூடுதல் தகவலை அவர் வெளியிடவில்லை. இந்த நாவல் ஜப்பானிய மொழியில் 1,200 பக்கங்கள் வரை வந்துள்ளதாகத் தெரிகிறது. இது ஏப்ரல் 13 அன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் ஜப்பானிய மொழியிலும் பிறகு ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியாகும் எனப் பதிப்பாளர் கூறியுள்ளார். கடைசியாக முரகாமியின் நாவல் 2017ஆம் ஆண்டு வெளிவந்தது. 6 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வரும் நாவல் என்பதால், இதன் மீது சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. முரகாமி தமிழில் நன்கு கவனம் பெற்ற எழுத்தாளர். ‘காஃப்கா கடற்கரையில்’, ‘நோர்வீஜியன் வுட்’, ‘இஸ்புட்னின் இனியாள்’ ஆகிய அவரது நாவல்கள் ஏற்கெனவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE