ந.பிச்சமூர்த்தியின் சிறார் கதை உலகம்!

By செய்திப்பிரிவு

தமிழ் இலக்கிய முன்னோடிகளில் ஒருவர் ந.பிச்சமூர்த்தி. கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை உள்ளிட்ட தளங்களில் ஆகச் சிறந்த பங்களிப்பு செய்தவர். புதுக்கவிதை, சிறுகதை குறித்த சிறுபேச்சிலும் இவர் பெயர் இடம்பெறாமல் போகாது. இவரின் மற்ற படைப்புகள் சிலாகித்தும் விவாதிக்கவும்பட்ட அளவுக்கு இவர் எழுதிய சிறார் கதைகள் கவனம் பெறவில்லை.

குழந்தைகள் மீது எப்போதுமே நேசம் கொண்டவராகவும், அவர்களின் அக உலகைப் பற்றித் தெரிந்துகொள்ளும் தேடலையும் கொண்டிருந்தார் பிச்சமூர்த்தி. அவரின் ‘பலூன் பைத்தியம்’ எனும் கட்டுரையில், குழந்தைகள் ஏன் பலூனை விரும்புகின்றன எனும் கேள்வி எழுப்பிச் சில விடைகளை உருவாக்குகிறார். பலூனில் உள்ள வண்ணங்களே குழந்தைகளைக் கவர்கின்றன என்றால் பூ, மேகம், வானம் உள்ளிட்டவற்றிலும் வண்ணம் இருக்கிறதே என்று அக்காரணத்தை ஒதுக்குகிறார். இவ்வாறு ஒவ்வொன்றாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார். அதாவது, “வித்தில்லாக் கத்திரிக்காயைப் போல் வாடி வதங்கிய பலூன் சிவப்புச் சந்திரனும் பச்சைச் சூரியனுமாக மாறிவிடுகிறதல்லவா - குழந்தைகள் கையில் ஏறியவுடன்? சிருஷ்டி சக்தி என்று ஒன்றிருக்கிறது. அதுவும் தங்களுக்குள் இருக்கிறது என்ற அறிவை இந்த விந்தை குழந்தைகளுக்குப் புகட்டுகிறது. நமக்கிருக்கும் சக்தியை வெளிப்படுத்துவதில்தான் இன்பம் உண்டாகிறது. இந்த இன்பத்தை நீடிக்கச் செய்ய வேண்டுமென்ற வெறிதான் பலூன் உடைந்துவிடுவதைக்கூட லட்சியம் செய்வதில்லை!” என்பதாக உணர்கிறார்.
தான் நினைப்பதில் ஓர் ஆன்மிக கனத்தை இறக்குவதுபோல அவருக்கே தோன்றியிருக்கக்கூடும். அதனால்தான், பலூன்கள் பறப்பது குழந்தைகளின் வெகுவிருப்பத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று வேறொரு கோணத்தையும் குறிப்பிடுகிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE