திரைக்கலைஞர்களின் ஒளிவிளக்கு

By செய்திப்பிரிவு

ஒளிப்பதிவு நிபுணராக வேலை தேடி வங்காளத்திலிருந்து சென்னைக்கு வந்த ஒருவர், தன் தனிப்பட்ட வாழ்க்கைத் தேவைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, அப்போது தென்னகத் திரையுலகில் நிலவி வந்த பாகுபாடுகளை அகற்றுவதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவரை ‘திரைக்கலைஞர்களின் ஒளிவிளக்கு’ என்று அழைப்பதுதானே பொருத்தமாக இருக்கும். அவர்தான் நிமாய் கோஷ்.

தென்னிந்தியத் திரையுலகில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் பணிபுரிந்த அதே நேரத்தில், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்கி, 1957 முதல் 1972 வரை அதன் தலைவராகச் செயல்பட்டவர். தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இதர தொழிலாளிகளுக்கும் உரிய அங்கீகாரத்தை, ஊதியத்தை உறுதிசெய்தவர். சிறந்த இசையமைப்பாளரான எம்.பி.சீனிவாசனுடன் இணைந்து அவர் வழங்கிய அயராத உழைப்பே இன்று தென்னிந்தியத் திரைத் துறை ஊழியர்களின் வாழ்க்கை பெரிதும் மேம்படுவதற்குக் காரணமாக இருந்திருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE