புத்தகக் காட்சி 2023 | திசையெட்டும் தீந்தமிழ்!

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசின் சார்பில், பொது நூலகத் துறையின் கீழ், தமிழ்நாடு பாடநூல் கழகமும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் - பதிப்பாளர் சங்கமும் (பபாசி) இணைந்து நடத்தும் ‘சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சி’ நேற்று தொடங்கியிருக்கிறது.

தென்னிந்தியாவின் திராவிட மொழிப் படைப்புகளைப் பிற இந்திய மொழிகளுக்குக் கொண்டுசெல்லும், ‘திசைதோறும் திராவிடம்’ என்கிற மொழியாக்கத் திட்டத்தைத் தமிழ்நாடு பாடநூல் கழகம் ஏற்கெனவே செயல்படுத்திவருகிறது. அரசியல்-சிந்தாந்தச் சார்புகளைத் தாண்டி, தமிழைக் கொண்டாடும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக, சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’, மு.கருணாநிதியின் ‘திருக்குறள் உரை’, ‘இந்து தமிழ் திசை’ வெளியீடான ‘மாபெரும் தமிழ்க் கனவு’, திராவிட வேதம் என்று சொல்லப்படுகிற ‘திருவாய்மொழி’ எனப் பரந்துபட்ட நூல்கள் தமிழிலிருந்து பிற இந்திய மொழிகளுக்குச் சென்றுள்ளன. அதை உலக மொழிகளுக்கு விரிவுபடுத்தும் முன்னெடுப்பாக, சர்வதேசப் புத்தகக் கண்காட்சியைத் தமிழ்நாடு அரசு முன்னெடுத்திருக்கிறது. தமிழ்ப் படைப்புகள் உலக மொழிகளுக்குச் செல்லும் பாதையை இந்த முன்னெடுப்பு விசாலப்படுத்தியிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE