இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கணிசமான எண்ணிக்கையில் தத்துவவாதிகளை உருவாக்கி, உலகச் சிந்தனைக்குப் பிரான்ஸ் வளம் சேர்த்துள்ளது. அவர்களுள் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் அறிவியல் ஆய்வுகளை (Science studies) மேற்கொண்டவர்களுள் முக்கியமானவர் புரூனோ லதூர். அறிவியல் உலகம் எப்படி இயங்குகிறது, எப்படித் தரவுகளைப் பரிசீலித்துக் கோட்பாடுகளை உருவாக்குகிறது என்பதை ஆராய்வதே அறிவியல் ஆய்வுகள்.
இந்தத் திசையில் தன் ஆய்வுகளைத் தொடங்கிய லதூர், அறிவியல் உலகம் சமூக ரீதியாகவே, அதாவது மனிதர்களின்கூட்டியக்கத்தில், அவர்களின் அக உலகத் தேர்வுகளின் மூலமாகவே ‘புற உண்மைகள்’ என்று கூறப்படுவனவற்றை நிறுவுகிறது என்று கூறினார். உல்கர் ஸ்டீவ் என்பவருடன் இணைந்து அவர் எழுதிய ‘Laboratory Life: The Construction of Scientific Facts’ (1979/1986) நூல் இந்தக் கருத்துகளை வெளிப்படுத்தியது. இது அறிவியலாளர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அறிவியலின் சமூகக் கட்டுமானம் (Social construction of science) குறித்த மிகப் பெரிய சர்ச்சை வெடித்தது. லதூரின் நிலைப்பாடு புற யதார்த்தம் என எதுவுமே கிடையாது என்பதல்ல. மாற்றாகப்புற யதார்த்தத்தை மனிதர்கள் தங்கள் சமூகச் செயல்பாடுகளுக்குத் தக்கவே கட்டமைத்துப் புரிந்துகொள்கிறார்கள் என்பதுதான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
6 days ago
கருத்துப் பேழை
6 days ago
கருத்துப் பேழை
6 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
20 days ago
கருத்துப் பேழை
20 days ago
கருத்துப் பேழை
20 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago