காப்பகக் குழந்தைகள் மரணம்: பாதுகாப்பு அலகும் அலுவலரும் என்ன செய்கிறார்கள்?

By செய்திப்பிரிவு

திருப்பூரின் விவேகானந்த சேவாலயம் காப்பகத்தில் குழந்தைகள் மூவர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் உட்கொண்ட உணவு, மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 11 குழந்தைகள் உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் காப்பகங்களின் முறைகேடான செயல்பாடுகள் தமிழ்நாட்டில் அடிக்கடி நிகழும் ஒன்றாக மாறிவருகின்றன. 2021இல் மதுரை மாவட்டத்தில், இதயம் அறக்கட்டளை காப்பகத்தில், ஒரு வயதுக் குழந்தை இறந்ததாகப் பொய்ச் சான்றிதழ் பெறப்பட்டு, அந்தக் குழந்தை ரூ.5 லட்சத்துக்கு விற்கப்பட்ட செய்யப்பட்ட விவகாரம் கவனத்துக்கு வந்தது. 2017இல் ராமநாதபுரத்தில் ஆதார் டிரஸ்ட் காப்பகத்தில் ரூ.4 லட்சத்துக்கு விற்கப்படவிருந்த குழந்தை மீட்கப்பட்டது. அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் ஒரு தனியார் காப்பகத்திலிருந்து 14 வயதுச் சிறுமி கர்ப்பிணியாக மீட்கப்பட்டார். களியாக்காவிளை, வில்லிவாக்கம், உசிலம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் உரிய அடிப்படை வசதி, ஊட்டச்சத்து இன்றித் தவித்த குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். களியாக்காவிளையில் 25-க்கு 15 அடி அளவு கொண்ட ஓர் அறையில் 76 குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த துயரமும் வெளிச்சத்துக்கு வந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE