தமிழ்நாடு சட்டமன்றத்தில் துணைவேந்தர்கள் நியமனம் குறித்துக் கொண்டுவரப்பட்டிருக்கும் சிறப்புச் சட்ட முன்வடிவு, தமிழ்நாட்டுக்கு இன்றைய சூழ்நிலையில் மிகவும் தேவையான ஒன்றாகும். இந்தச் சட்ட முன்வடிவு, மாநில அதிகாரங்களை உறுதிப்படுத்தவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமைகளை நிறைவேற்றவும் பெரிதும் பயன்படும். இது குறித்து முதல்வரும், உயர் கல்வித் துறை அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினர்களும் கூறிய பல்வேறு செய்திகள், தொலைக்காட்சி மூலமாகவும் செய்தித்தாள்கள் மூலமாகவும் தெளிவாக மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லப்பட்டன.
1975-லிருந்து தொடர்ந்து பல்கலைக்கழகக் கல்வியிலும், நிர்வாக அமைப்பிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. 1976-ல்தான் கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. 1947-லிருந்து 1990 வரை ஒருசில மத்தியப் பல்கலைக்கழகங்களே இருந்துவந்தன. அவற்றின் நோக்கராக (Visitor) குடியரசுத் தலைவர் இருந்துவந்தார். அந்தப் பல்கலைக்கழகங்களில் தேர்வுக் குழுவால் தேர்வுசெய்யப்பட்ட மூவரில் ஒருவரை ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் மத்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக நியமித்துவந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்