இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவைப் பதவி விலகக் கோரி பொதுமக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு நாடு முழுவதும் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். கடந்த மார்ச் 31-ம் திகதி முன்னிரவில் கொழும்பு, மிரிஹானையில் உள்ள ஜனாதிபதி மாளிகையைச் சூழவும் பொதுமக்கள் தமது கைக்குழந்தைகளையும் சுமந்துகொண்டு மெழுகுத்திரிகளையும், ஜனாதிபதியைப் பதவி விலகக் கோரும் பதாகைகளையும் ஏந்திக்கொண்டு அமைதியாகப் போராடிக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் ஆயுதங்களோ தடிகளோ இருக்கவில்லை.
எந்தக் கட்சியையும் சாராமல் சுயமாக ஒன்றுசேர்ந்த அந்த மக்கள் கூட்டத்தைக் கலைக்கக் கண்ணீர்ப் புகைகுண்டுகளையும், துப்பாக்கி வேட்டுகளையும் பயன்படுத்தியது இலங்கை காவல் துறை. ஜனாதிபதியின் இல்லத்துக்குச் செல்லும் பாதைக்குக் குறுக்காக ஒரு பேருந்து நிறுத்தப்பட்டு, அதை இனம்தெரியாத ஒருவர் பற்ற வைக்கும் காணொளிகளும், போலீஸ் வாகனம் ஒன்றைப் பற்ற வைக்கும் காணொளிகளும் சர்வதேச ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவத் தொடங்கின.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்