அச்​சுறுத்​தும் ஆன்​டிமைக்​ரோபியல் ரெசிஸ்​டன்ஸ்

By இந்து குணசேகர்

நவீன மருத்துவத்தின் மிகப் பெரிய பிரச்சினையாக ‘ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ்’ மாறி​யிருக்​கிறது. இதனால், தற்​போது சிகிச்சை அளிக்கப்​பட்​டு​வரும் கிரு​மித் தொற்​றுகளால் ஏற்​படும் நோய்​களுக்கு எதிர்​காலத்​தில் திறம்பட சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படலாம் என்கிற அச்சம் உருவாகியுள்ளது.

உலக நலவாழ்வு நாளான இன்று (ஏப்​ரல் 7) ஆன்​டிமைக்​ரோபியல் ரெசிஸ்​டன்ஸ் என்​றால் என்ன என்​பதை அறிந்​து​கொள்​வோம். நம் உடலில் நோய்​களை ஏற்​படுத்​து​வ​தில் பாக்​டீரி​யா, வைரஸ், பூஞ்​சைகள் போன்​றவை முக்​கியப் பங்கு வகிக்​கின்​றன.

இந்த நுண்​ணுயி​ரி​களால் ஏற்​படும் நோய்​களைக் குணப்​படுத்த வழங்​கப்​படும் மருந்​துகள் ஆன்​டிப​யாடிக், ஆன்​டிவைரல், ஆன்​டிஃபங்​கல் என அழைக்​கப்​படு​கின்​றன. இந்த நுண்​ணு​யிர்க்​கொல்லி மருந்​துகளுக்கு எதி​ராக பாக்​டீரி​யாக்​கள், வைரஸ்​கள், பூஞ்​சைகள் எதிர்ப்​புத்​தன்​மையை வளர்த்​துக்​கொள்​வதை ‘ஆன்​டிமைக்​ரோபியல் ரெசிஸ்​டன்​ஸ்’ என்று அழைக்​கிறோம்.

உதா​ரணத்​துக்​கு, பாக்​டீரி​யா​வால் ஏற்​படும் நோய்​களுக்கு அளிக்​கும் ஆன்டிப​யாட்​டிக்​கு​கள் இயங்​கும் விதம், இரண்டு வகை​யாக உள்​ளது. ஒன்று பாக்​டீரி​யாக்​களைக் கொல்​லும் வகை (BACTERICIDAL). மற்​றொன்று பாக்​டீரி​யாக்​களின் இனப்​பெருக்​கத்​தைக் கட்​டுப்​படுத்​தும் ஆன்​டிப​யாட்​டிக்​கு​கள் (BACTERIOSTATIC).

இந்த நிலை​யில் பாக்​டீரி​யாக்​களால் தொற்று ஏற்​படும்​போது அந்​த தொற்​றுக்​கு சரி​யான ஆன்​டிப​யாடிக்​கை குறிப்​பிட்ட அளவில், குறிப்​பிட்ட நேரத்​தில், குறிப்​பிட்ட காலம் ​வரை வழங்க வேண்​டும். அப்​போது​தான் பாக்​டீரி​யாக்​களை முழு​மை​யாக கொல்ல முடி​யும்.

இதில், பாக்​டீரி​யா​வை கொல்​லும் ஆன்​டிப​யாட்​டிக்​கு​களை சரி​யான அளவில் சரி​யான கால அளவில் பயன்​படுத்​தா​விட்​டால், இந்த ஆன்​டிப​யாட்​டிக்​கு​களை எதிர்க்​கும் திறனை நுண்​ணுயி​ரி​கள் தங்​களது மரபணுக்​களில் ஏற்​படும் சிறுசிறு மாற்​றங்​கள் மூலம் வளர்த்​துக்​கொள்​ளும். இந்த எதிர்க்​கும் திறனை தங்​களுக்​குள் மட்​டும் வைத்​துக்​கொள்​ளாமல் தங்​களது சந்​த​தி​யினருக்​கும் மரபணு மூலம் அவை கடத்​தி​விடு​கின்​றன. இதனால், குறிப்​பிட்ட ஆன்​டிப​யாட்​டிக்​குக்கு அடிபணி​யாத பாக்​டீரி​யாக்​கள் அதி​கரிக்​கின்​றன.

மருந்​துகள் வேலை செய்​யாது: உலக சுகா​தார நிறு​வனத்​தின் 2021 அறிக்​கை​யின்​படி, தற்​போது 45 ஆன்​டிப​யாட்​டிக்​கு​கள் மட்​டுமே ஆரம்​பக்​கட்ட ஆய்வு நிலை​யில் உள்​ளன. இவை மூன்று நிலை பரிசோதனை​களைக் கடந்து மக்​கள் பயன்​பாட்​டுக்கு வரு​வதற்கு அடுத்த 10 ஆண்டு​கள் ஆகும்; அதி​லும் பரிசோதனை அளவு​கோல்​களைக் கடந்து 10 ஆன்​டிப​யாட்​டிக்​கு​கள் மட்​டுமே நம் கையில் கிடைக்​கக்​கூடும் என கூறப்​படு​கிறது.

ஃபரூக் அப்துல்லா

இதுகுறித்து மருத்​து​வர் ஃபரூக் அப்​துல்லா கூறியதாவது: மனிதர்​களுக்கு ஏற்​படும் பாக்​டீரியா தொற்​றுக்கு நம் கையில் இருக்​கும் அனைத்து ஆன்டிப​யாடிக்​கு​களும் வேலை செய்​யாத நிலை இப்​போதே வந்​து​விட்​டது. இதை ‘முழு​மை​யான மருந்து எதிர்ப்பு நிலை’ (Total Drug Resistance) என்​கிறோம்.

இந்த நிலை​யை, காசநோ​யில் அதி​கம் பார்க்க முடிகிறது. எவ்​வளவு விலை உயர்ந்த ஆன்​டிப​யாட்​டிக்​கு​கள் கொடுத்​தும் நிலைமை சரி​யா​காமல் நோயாளி​கள் உயிரிழந்து ​வரு​கின்றனர். மருந்துகளை தவிர்க்கலாம் இதைத் தவிர்க்க, நாமாக மருந்​தகங்​களுக்​கு சென்று ஆன்​டிப​யாட்​டிக் மாத்​திரைகளை வாங்கி உட்​கொள்​ளக் கூடாது.

பெரும்​பாலும் மழைக்​காலத்​தில் வரும் சளி, மூக்​கடைப்​பு, காய்ச்​சலுக்கு வைரஸ்​களே காரணம். எனவே, பரு​வ​கால வைரஸ் தொற்​றுகளுக்கு எடுத்த எடுப்​பிலேயே ஆன்​டிப​யாடிக்​ உட்​கொள்ள ஆரம்​பிப்​பதை தவிர்க்​கலாம். கிரு​மித் தொற்​றி​னால் நோய் ஏற்​பட்​டால் மருத்​து​வரிடம் சென்று அவர் பரிந்​துரைக்​கும் ஆன்​டிப​யாட்​டிக் மருந்​துகளை சரி​யான அளவில், சரி​யான இடைவெளி​யில், பரிந்​துரைக்​கப்​பட்ட காலம்​வரை உட்​கொள்ள வேண்​டும். கை கழு​வுதல், தும்​மும்​போது கைக்​குட்டை கொண்டு மூக்​கை​யும் வாயை​யும் மூடு​வது, தண்​ணீரை காய்ச்சி வடிகட்​டிக் குடிப்​பது போன்ற தனிப்​பட்ட சுகா​தார நடவடிக்​கைகளை கடை​பிடிக்க வேண்​டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ரவி பட்நாகர்

கால​ தாமதம் கூடாது: சமகாலத்​தின் சுகா​தா​ர சவாலாக ஆன்​டிமைக்​ரோபியல் ரெசிஸ்​டன்ஸ் உள்​ள​தாக பன்​னாட்டு நுகர்​வோர் நிறு​வன​மான ‘ரெக்​கிட்​’டின் வெளி​விவ​காரங்​கள் மற்​றும் கூட்​டாண்மை இயக்​குநர் ரவி பட்​நாகர் கூறுகிறார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: நுண்​ணு​யிர் எதிர்ப்பு மருந்​துகள் குறை​வான செயல்​திறன் கொண்​ட​வை​யாகி வரு​வ​தால் ‘ஆன்​டிமைக்​ரோபியல் ரெசிஸ்​டன்​ஸ்’ உலக அளவில் சத்​தமில்​லாத தொற்​று​நோ​யாக மாறிவரு​கிறது. இதில் குழந்​தைகளே அதி​கம் பாதிக்​கப்​படு​கின்றனர்.

ஆன்​டிமைக்​ரோபியல் ரெசிஸ்​டன்​ஸை கட்​டுப்​படுத்த உடனடி நடவடிக்​கை​களில் இறங்க வேண்​டும். இதில் கால​தாமதம் கூடாது. நோயை தடுப்​ப​தற்​கான தயார் நிலை, தடுப்பு நடவடிக்​கைகளை தனது கவச​மாக கொண்​டிருப்​பதுடன், ஆரோக்​கி​யத்​தின் அடித்​தள​மாக நலவாழ்வை ரெக்​கிட்​ நிறு​வனம்​ கொண்​டுள்​ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (ஏப்​ரல்​ 7) | உலக நல​வாழ்​வு தினம்​

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்