கலை, தத்துவம் ஆகியவற்றின் சிந்தனை வளங்களில் செழுமை பெற்ற படைப்பு மனம் கொண்டவர் ஓவியர் மு.நடேஷ் (14.01.1960 - 20.09.2024). உத்வேகத்தின் உருவகம்; இவர் ஓர் ஓவியக் கலைஞர் மட்டுமல்ல; நவீன நாடகக் கலையிலும் - இயக்கம், அரங்கமைப்பு, ஒளி ஆகிய தளங்களில் - தன் அடையாளத்தைப் பதித்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழகக் கலைவெளியில் நிர்மாணக் கலையில் (installation art) படைப்பாக்கம் மேற்கொண்ட முன்னோடி. வெளியீடு பற்றிய அக்கறையின்றி, கதை, நாவல், கவிதை, நாடகம், கட்டுரை என ஆங்கிலத்தில் நிறைய எழுதிவைத்திருக்கிறார்.
1960 ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் பிறந்தவர். தமிழ்ச் சிறுகதை, நவீன நாடகவெளியில் தனித்துவமிக்க ஆளுமையான ந.முத்துசாமியின் மூத்த மகன் இவர். இவருடைய ஆளுமை உருவாக்கத்தில், தந்தைக்கும் தந்தையின் சகாக்களான கலை இலக்கிய ஆளுமைகளுக்கும் பங்குண்டு.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்