அஞ்சலி: மு. நடேஷ் | புதிய கடவுளைத் தேடிய கலைஞன்

By சி. மோகன்

கலை, தத்துவம் ஆகியவற்றின் சிந்தனை வளங்களில் செழுமை பெற்ற படைப்பு மனம் கொண்டவர் ஓவியர் மு.நடேஷ் (14.01.1960 - 20.09.2024). உத்வேகத்தின் உருவகம்; இவர் ஓர் ஓவியக் கலைஞர் மட்டுமல்ல; நவீன நாடகக் கலையிலும் - இயக்கம், அரங்கமைப்பு, ஒளி ஆகிய தளங்களில் - தன் அடையாளத்தைப் பதித்​தவர். எல்லா​வற்றுக்கும் மேலாக, தமிழகக் கலைவெளியில் நிர்மாணக் கலையில் (installation art) படைப்​பாக்கம் மேற்கொண்ட முன்னோடி. வெளியீடு பற்றிய அக்கறை​யின்றி, கதை, நாவல், கவிதை, நாடகம், கட்டுரை என ஆங்கிலத்தில் நிறைய எழுதி​வைத்​திருக்​கிறார்.

1960 ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் பிறந்​தவர். தமிழ்ச் சிறுகதை, நவீன நாடகவெளியில் தனித்து​வ​மிக்க ஆளுமையான ந.முத்​துசாமியின் மூத்த மகன் இவர். இவருடைய ஆளுமை உருவாக்​கத்​தில், தந்தைக்கும் தந்தையின் சகாக்களான கலை இலக்கிய ஆளுமை​களுக்கும் பங்குண்டு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE