ஆங்கிலேய ராணுவத் தளபதிகள் மேஜர் பானர்மேன், மேஜர் இன்ஸ், கர்னல் அக்கினியூ உள்ளிட்டோர் கோர தாண்டவம் ஆடிய காலக்கட்டம் அது. காளையார்கோயிலைப் போரில் வென்ற பின் 1801ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பரில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட போராளிகளைக் கைதுசெய்து, அவர்கள் செல்வாக்குடன் வாழ்ந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. சிலரை மட்டும் ஆங்கிலேயர்கள் தனிமைப்படுத்தினர். தூக்குக்குத் தப்பியவர்களுக்குத் தீவாந்திரத் தண்டனை கொடுத்தனர். மரணத்தைவிடக் கொடிய தண்டனை அது. அரசியல் கைதிகளைத் தங்களது தேசத்தின் சுதந்திரத்துக்காகப் போராடியவர்களை ஒடுக்க வேண்டிய நெருக்கடியை முதன்முறையாக ஆங்கிலேயர்கள் சந்தித்தனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்