உள்ளாட்சித் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படாவிட்டால் என்னென்ன சிக்கல்கள் நேரும் என்பதை - சமீபகால வரலாற்றைச் சொல்லி - நினைவூட்ட வேண்டிய தருணம் இது. காரணம், வருகின்ற 2025 ஜனவரி 6ஆம் தேதியோடு 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சிகளின் பதவிக் காலம் முடிவடைய இருக்கிறது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். இந்நிலையில், அந்தத் தேர்தல் நடைபெறுமா அல்லது மீண்டும் ஒரு வரலாற்றுப் பிழை நிகழ்த்தப்படுமா என்கிற அச்சம் எழுந்துள்ளது.
தடையின்றி நடந்த தேர்தல்கள்: 1994 முதல் புதிய பஞ்சாயத்துச் சட்டம் வந்த பிறகு, அரசமைப்புச் சட்டம் வழங்கிய அதிகாரங்களின்படி 1996இல் தமிழ்நாட்டில் முதலாவது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கிராமசபை அதிகாரங்கள், மகளிர்/ பட்டியல் சாதியினர் /பட்டியல் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு, கிராம அளவிலான திட்டமிடுதலுக்கான அதிகாரங்கள் உள்ளிட்ட பல அதிகாரங்களோடுதான் இந்தப் புதிய உள்ளாட்சிகள் செயல்பாட்டுக்கு வந்தன. 1996 முதல் எந்தத் தடையும் இன்றி உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றுவந்தன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்