கடற்கரையும் காலநிலைப் புரிதலின்மையும்

By வறீதையா கான்ஸ்தந்தின்

காலநிலைப் பிறழ்வின் முதன்மையான விளைவுகளில் ஒன்று, கடல் மட்ட உயர்வு. கடல்மட்டம் உயர்ந்தால் கரை நிலங்களுக்கு என்ன ஆகும்? கடற்கோள்கள் போல அல்லாமல், கடல் மெதுவாகக் கரைநிலங்களை விழுங்கத் தொடங்கும். மனித நடவடிக்கைகளால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கும் கரைப் பகுதிகள் இதற்கு முதல் பலியாகும். தாழ்ந்த கரைநிலப் பகுதிகளில் கடல் எளிதில் உள்ளேறும். இது மெதுவாக நிகழும் பேரிடர்.

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களின் 76% கடற்கரை புயல், கடல்மட்டம் உயர்தல், கடல் அரிமான அபாயத்தில் உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக காலநிலைப் பேரிடர் மேலாண்மை மையத்தின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. கன்னியாகுமரி, கடலூர், சென்னைக் கடற்கரைகளில் 60% பகுதிகள் காலநிலைப் பேரிடர் அபாயத்தில் உள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE