கூடுதல் சுங்கச் சாவடிகள் எப்போது மூடப்படும்?

By செய்திப்பிரிவு

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்த 5% முதல் 7% வரையிலான சுங்கக் கட்டண உயர்வு, தமிழ்நாட்டில் 25 சுங்கச் சாவடிகளில் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி ரூ.5 முதல் ரூ.150 வரை கட்டணம் அதிகரித்துள்ளது. இக்கட்டண உயர்வு தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளைக் கவலைக்குள்ளாக்கி உள்ளது.

தமிழ்நாட்டில் 3,109 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் 67 சுங்கச் சாவடிகள் செயல்பட்டுவருகின்றன. இவற்றில் 2008ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண (நிர்ணயம் - வசூல்) விதிகளின்படி ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல், செப்டம்பர் என இரண்டு கட்டங்களாகக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரலில் மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், தமிழ்நாட்டில் 36 சுங்கச் சாவடிகளின் கட்டணம் ஜூனில் உயர்த்தப்பட்டது. தற்போது 25 சுங்கச் சாவடிகளுக்குக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE