உயிரி - பொருளாதாரம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்புக் கொள்கை | சொல்... பொருள்... தெளிவு

By ஆனந்தன் செல்லையா

வேளாண்மை, உணவு உற்பத்தி, மருத்​துவம் உள்ளிட்ட துறைகளில் உயிரியல் தொழில்​நுட்​பத்தைப் பயன்படுத்திப் பல சிக்கல்களுக்குத் தீர்வுகள் காணப்​பட்டு வருகின்றன. இந்தியாவில் உயிரி தொழில்​நுட்​ப​வியல் (பயோ டெக்னாலஜி) 1986இல் மத்திய அரசின் அறிவியல் - தொழில்​நுட்ப அமைச்​சகத்தில் ஒரு புதிய துறையாகச் சேர்க்​கப்​பட்டது. பிற நாடுகளால் மதிக்​கப்​படத்தக்க நிலையை அத்துறையில் இந்தியா இன்றைக்கு அடைந்​துள்ளது. கரோனா பெருந்​தொற்றுக் காலத்தில் ஏராளமான நாடுகளுக்கு இந்தியா தடுப்​பூசிகளை வழங்கி உதவியது, அதன் உயிரி தொழில்​நுட்​ப​வியல் வளர்ச்​சிக்கு ஒரு சான்று.

மூன்று இலக்குகள்: கடந்த ஓராண்​டாகவே பிரதமர் நரேந்திர மோடி, ‘விகஸித் பாரத்’ (வளர்ச்சி அடைந்த இந்தியா) என்னும் இலக்கு குறித்துப் பேசி வருகிறார். இந்தியா தனது நூறாவது விடுதலை நாளைக் கொண்டாட உள்ள 2047க்குள் மிகுந்த வளர்ச்சியை எட்ட வேண்டும் என்பதே அதன் சாராம்சம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE