மேகாலயா மாநிலத்தில் உள்ள மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் இரண்டு வயதுக் குழந்தை இள ம்பிள்ளைவாத நோயால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகச் சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம், இந்தத் தொற்று போலியோ தடுப்புச் சொட்டு மருந்து மூலம் பெறப்பட்டது என்றும், இந்தியாவின் ‘இளம்பிள்ளை வாதம் இல்லாத நிலை’யைப் பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளது. இருந்தாலும், தொற்று பரவாமல் இருக்க அரசு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளது.
இந்தியாவில் இளம்பிள்ளைவாதம் (Poliomyelitis) 2011இல் ஒழிக்கப்பட்டுவிட்டது. இளம்பிள்ளைவாதம் பாதிப்புள்ள நாடுகளின் உலகப் பட்டியலிலிருந்து 2012இல் இந்தியா விடுதலை பெற்றுவிட்டது. ‘இந்தியா இளம்பிள்ளைவாதம் இல்லாத நாடு’ என்று 2014இல் உலகச் சுகாதார நிறுவனமும் அறிவித்துவிட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்