தொன்மம் தொட்ட கதைகள் - 15: கர்ணனின் காதலி

By செய்திப்பிரிவு

​வில்லி பாரதத்தில் இடம்பெற்றுள்ள பானும​திக்கும் கர்ணனுக்கும் இடையிலான தொன்மக் கதையை அடிப்​படை​யாகக் கொண்டு எழுத்​தாளர் கரிச்​சான்​குஞ்சு ‘பானுமதி’ என்றொரு சிறுகதையை எழுதி​யுள்​ளார். பதினேழாம் நாள் யுத்தத்தில் கர்ணன் கொல்லப்​படு​கிறார். துரியோதனனின் இறுதி நம்பிக்கையாக இருந்த கர்ணனின் மறைவிற்குப் பிறகு ஏறக்குறைய போர் முடிந்​து​விட்டது என்றே அனைவரும் கருதுகின்​றனர். திருத​ராஷ்டிரனும் காந்தா​ரியும் எப்படி​யாவது துரியோதனனை​யாவது காக்க வேண்டும் என்று முயல்​கின்​றனர். துரியோதனன் எவருடைய பேச்சையும் கேட்கத் தயாராக இல்லை. துரியோதனனை விட்டு​விடும்படி தன் பெரியப்பா கோரிக்கை வைத்தால் தன்னால் நிராகரிக்க முடியாது என்று தருமன் பதற்றமடைகிறார். அதற்குள் அவரைக் கொன்றுவிட வேண்டும் என்று பாண்ட​வர்கள் ஆர்வமாகக் காத்திருக்​கின்​றனர். துரியோதனனைக் கொன்றால்தான் போர் முடியும்; பீமன், திரௌப​தியின் சபதம் நிறைவேறும். இச்சூழ்​நிலை​யில், தன் மனைவி பானும​தியைத் தேடி துரியோதனன் வருகிறார். ஓர் இழைகூடப் பொன்னும் மணியும் அணியாமலும் கூந்தலை அலங்கரிக்​காமலும் இருக்​கிறார் பானும​தி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்